தருமபுரி பிப்-6,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மாதா மாதம் தொழிலாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் பிஎஃப், பணத்தை உரிய அலுவலகத்தில் செலுத்த வேண்டுகிறோம். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தினக்கூலி யாக ரூ 653 வழங்கவேண்டும். தொழிலாளர் ஒய்வு பெறும் நாளன்றெ அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும்.ஒப்பந்த பணியாளர்களுக்கு மாத சம்பள பட்டியல் வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களின் பிப்இஎஸ்ஐ கட்ட மறுத்திடும் கான்டராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர விரிவாக்கத்திற்கு ஏற்றார் போல் புதிய பணியாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்.

தளவாட சாமான்களை தரமானதாக வழங்கவேண்டும் ஒப்பந்த பணியாளர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறை, மாஸ்க் தினமும் வழங்க வேண்டும். அதிகாரிகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை டிவிசன் வாரியாக மாறுதல் செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்களை பணியிடத்தில் கண்ணியமாக நடத்த வேண்டும்.
தொழிலாளர் துறை பேச்சு வார்த்தையில் பங்கேற்க மறுக்கும் தாங்கள் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சி.குட்டியப்பன் தலைமை வகித்தார்.
சிஐடியு மாநில செயலாளர் சி.ந்கராசன்,மாவட்ட செயலாளர் பி.ஜீவா,சங்க மாவட்ட பொருளாளர் டி.வெங்கட்டேசன், நிர்வாகிகள் திருப்பதி ,ஜாணகி,வள்ளி,வெங்கட்டேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.சிஐடியு தொழிலாளர்கள் கலந்துக்கொண்டனர்.

