பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தின் சார்பில் தருமபுரி போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டதிற்க்கு மண்டல தலைவர் ஜி. பூபேஸ் குப்தா தலைமை வகித்தார். மண்டல பொதுச் செயலாளர் சி.நாகராசன் மற்றும் மாவட்ட நிவாகிகள் வி. நாராயணன், கே.முருகன்,
ஜி. செல்வராஜ், கே. வரதராஜன், எம். மாதேஸ்வரன், ஜெ. பிரதபன், எஸ். ரவி, ஆர். சுதர்சன், டி.கோவிந்தசாமி, என். மனோகரன், எம். மூர்த்தி, பி. கோவிந்தசாமி, எம். மருதமலை உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
15- வது ஊதிய ஒப்பந்தத்தை அமலக்க வேண்டும், பஞ்சப்படி நிலுவை தொகை வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

