தருமபுரி பிப-5,
பிக்கிலி ஊராட்சிக்கு குடிநீர் தெருவிளக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பிக்கலி ஊராட்சி.இவ்ஊராட்சிக்குபட்ட பெரியூர்,பூதிநத்தம்,குட்டக்கோசம்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை.
குறிப்பாக பூதிநத்தம் கிராமத்தில் இருந்து சங்கிலி நத்தம் வரை உள்ள தாய் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிறது.இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சங்கிலிநத்திலிருந்து தட்டப்பள்ளம் வரை உள்ள மண் சாலை ,முட்டைகோசம் பள்ளம் முதல் சின்னக்குட்டி கொட்டாய் வரை உள்ள மண் சாலை,சங்கிலிநத்திலிருந்து ஆணையிட்டு மாரியம்மன் கோயில்வரை செல்லும் மண்சாலை,சங்கிலிநத்திலிருந்து குரும்பர் கொட்டாய் வரை செல்லும் மண்சாலை ஆகிய மண்ச்லைகளை தார்சாலையாக மாற்றவேண்டும்.பூதிநத்தம் – சங்கிலி நத்தம் சாலையின் குறுக்கே நொண்டிக் கால் ஓடையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கவேண்டும்.
தருமபுரி பூதிநத்தம் மேல்நிலைநீர்தேக்கத்தொட்டியில் இருந்து குட்டகோசப்பள்ளம் பகுதிக்கு பைப் லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யவேண்டும்.சக்கிலிநத்தம் தட்டப்பள்ளம் பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும்.தெருவிளக்கு ரேசன் கார்டு இல்லாத மக்களுக்கு ரேசன் கார்டு வழங்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

