தருமபுரி பிப-5,
இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு ஆர்.எஸ்.தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏழை மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சாமண்ட் அள்ளி ஊராட்சிக்குபட்டது.ஆர்.எஸ்.தொட்டம்பட்டிஇங்கு பல்வேறு சமூக மக்கள் வாழ்கின்றனர்.அனைவரும் ஏழை கூலி தொழிலாளர்கள் சொந்த நிலம் இல்லை பலருக்கு வீடு இல்லை.மேலும் சிலர் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.இதுவரை அந்த இடத்திற்கான பட்டா வழங்கவில்லை.
வீடு இல்லாத மக்கள் பலர் ஒரே வீட்டில் இரண்டு மூன்று தடுப்புகளாக பிரித்து அதில் குடியிருந்து வருகின்றனர்.
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை வட்டாட்சியர் உள்ளிட்ட அலீவலரிடம் மனு கொடுத்தனர்.மனுவின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
மேலும் புறம்போக்கு இடத்தில் 50 க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட ஆண்டுகாலமாக குடியிருந்து வருகின்றனர்.இவர்களுக்கும் பட்டா வழங்கவில்லை.தினக்கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்பிழைப்பு நடத்தவேண்டியுள்ளது.இதனால் சொந்தமாக பணம் கொடுத்து மனைவாங்க முடியாத நிலை உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டுமனை பட்டாவும் நீண்ட ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களுக்கு மனைப்பட்டா வழங்கவேண்டுமமென மனு கொடுத்துள்ளனர்.

