தருமபுரி பிப்-5
சாலை பாதுகாப்பு குறித்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் தருமபுரி மதுராபாய்திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன்ஜேசுபாதம் வட்டார போக்குவரத்து அலுவலர் டி.தாமோதிரன், மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க மாநில துணைத்தலைவர் நாட்டான் மாது,தருமபுரி மாவட்ட செயலாளர் சையத் அப்சல் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்களை ஓட்டுநர்களுக்கு வழங்கினர்.

கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் டி.தாமோதிரன் பேசுகையில்,
இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 5 இலட்சம் விபத்துக்கள் நடக்கிறது இதில் 1 இலட்சத்து 62 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். விபத்தில் உயிரிழக்கும் ஒருவர் அவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக 20 ஆண்டுகள் பின்னுக்கு சென்றுவிடும்.எனவே விபத்தை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு சாலையில் செல்லவேண்டும்.சாலைவதிகளின் படி வாகனத்தை இயக்கவேண்டும் .
ஓட்டுனர்கள் வாகனத்தை இயக்கும் போது பிரேக்,கிளர்ச்,லைட்,வைபர்,ஹெண்ட்பிரேக் போன்றவற்றை ஒழுங்காக இயங்குகிறதா என சரிபார்க்கவேண்டும்.வாகனததை முந்தும் போது 10 மீட்டர் இடைவெளியில் முந்த வேண்டும்.வளைவுகளில் முந்தகூடாது.ஸ்கூல் பேருந்து இயக்கும் ஓட்டுனர்கள் ரிவேஸ் எடுக்கும் போது காவனமாக இருக்கவேண்டும்.பேருந்தில் உள்ள குறைகளை அவ்வப்போது சிரிசெய்யவேண்டும்.60 கிலோ மீட்டர் ஸ்பீடில் வாகனதை இயக்கினால் துள்ளியமாக 10 மீட்டர் இடைவெளியில் நிறுத்த முடியும் அவசரமாக சாலையின் குறுக்கே வந்தால் பிரேக்கை இரண்டு முறை விட்டு பம்செய்து நிறுத்தலாம்.கியரை சேஞ்ச்செய்து ஹெண்ட்பிரேக்மூலமும் நிறுத்தலாம்.பயனிகளை பாதுகாப்பாக கொண்டு செல்வதுதான் நல்லடிரைவருக்கு அழகு என தெரிவித்தார்.

