தருமபுரியில் பிப்ரவரியில் வனத்துறையினர் நடத்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி வனக்கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் எதிர் வரும் 06-02-2024 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில் தருமபுரி மாவட்ட வன அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு வனத்துறை சார்ந்த கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

