தருமபுரி பிப்-5,
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் கண்டைனர் லாரி விபத்துக்குள்ளனாதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானர்.
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பகுதி சேர்ந்த சிவசங்கர் 55. இவர் கிருஷ்ணகிரியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கேக் செய்ய பயன்படுத்தும் கிரீம் பாரத்தை கண்டெய்னர் மூலம் லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றார். கண்டெய்னர் லாரி தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் வந்த போது ஓட்டுநரின் அஜாக்கிரதியால் கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த கண்டெய்னர் மட்டும் தனியாக சாலை ஓரம் கவிழ்ந்தது. இந்த இடுப்பாடுகளில் சிக்கி டிரைவர் சிவசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து குழுவினர் இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ள லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
