தருமபுரி பிப-5,
திமுக தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில்
மாநில உரிமைகளை காக்கவும் , ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்க்க வேண்டுமென தருமபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் அழைப்பு விடுத்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி துணை செயலாளர் உமாசங்கர், பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ், நகர செயலாளர் நாட்டான் மாது, பாலக்கோடு ஒன்றிய கழக செயலாளர் கருணாநிதி, நல்லம்பள்ளி முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பி.சி துரைசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

