மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம் செயல்படுத்துவது குறித்த பள்ளி தலைமையாசிரியர்களுடனான கூட்டம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டதிர்க்கு தலைமைவகித்து பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம் செயல்படுத்துவது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி. இளங்கோவன் மற்றும் தனிப்பிரிவு ஆய்வாளர் கோ. அன்பழகன், இத்திட்டத்தின் பொறுப்புக் காவல் அலுவலரும், தருமபுரி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளரும் ஆகிய கே.புவனேஷ்வரி, ஆகியோர் கலந்துக்கொண்டர்.
