உலகில் பல்வேறு காரணங்களுக்காகவும் உரிமை மற்றும் தன் இனத்திற்க்காக போர் நடைபெற்று வருகிறது. போரின் போது ஒரு இனத்தின் தலைமுறையை வேறோடு அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக குழந்தைகள் குறிவைத்து கொள்ளப்படுகிறார்கள்.
உலக அளவில் நடைப்பெற்ற போர் மற்றும் கலவரங்களால் 2018 ஆம் ஆண்டு 12 ஆயிரம் குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த போரில் மட்டும் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. காசாவில் ஹமாஸ் இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களில் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதற்க்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் நடத்திய போரில் 117 குழந்தைகள் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காசாவில் மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக சொல்லபடுகிறது. “உக்ரைனில் ஏறத்தாழ 972 குழந்தைகள் வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயம் அடைந்துள்ளனர் என்றும், போரின்போது ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஐநா அதிகாரி தெரிவித்துள்ளார்.

போர், வன்முறை பிரச்சினைகளால் உலகளவில் 3.6 கோடி குழந்தைகள் இடம் பெயர்வு
போர், வன்முறை, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், பேரிடர்கள் போன்றவை காரணமாக 2021-ம் ஆண்டு இறுதி வரை உலகளவில் 3.6 கோடி குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 2-ம் உலகப் போருக்குப்பின் இது மிக அதிகமான அளவு என்றும் குழந்தைகளுக்கான ஐ.நா அமைப்பு யுனிசெப் தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரினால் இடம் பெயர்ந்தவர்கள் இந்த அறிக்கையில் சேர்க்கப்படவில்லை.
கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் இந்த எண்ணிக்கையில் 22 லட்சம் பேர் அதிகரித்தனர். இடம் பெயர்ந்த குழந்தைகளில் 1 கோடியே 37 லட்சம் பேர் அகதிகள். உள்நாட்டு சண்டை, வன்முறை ஆகியவை காரணமாக 2 கோடி 28 லட்சம் பேர் உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்துள்ளனர் எனவும் யுனிசெப் கூறியுள்ளது. இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் இதர சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அகதிகளாக வந்த குழந்தைகளில் பாதி பேர் மட்டுமே ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இளம் வயது சிறுவர்களில், கால்வாசிக்கும் குறைவானவர்களே பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெற்றோரைவிட்டு பிரிந்து தனியாக இருக்கும் குழந்தைகள் கடத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் இதர சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அகதிகளாக வந்த குழந்தைகளில் பாதி பேர் மட்டுமே ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இளம் வயது சிறுவர்களில், கால்வாசிக்கும் குறைவானவர்களே பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தும் அவலம்
பெற்றோரைவிட்டு பிரிந்து தனியாக இருக்கும் குழந்தைகள் கடத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் இடம்பெயர்ந்த குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு அமர்த்தும் செயலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செயலில் ஐநா பொறுப்புடன் கவனித்தலும், எச்சரித்தாலும் போர் சூழலில் குழந்தைகள் மீதான தாக்குதலை நாடுகள் நிறுத்தியப்பாடு இல்லை. குழந்தைகள் மீது எந்த சூழலிலும் தாக்குதல் நடத்தப்பட கூடாது என்பதை எந்த வகையில் வழியுறுத்தினாலும் குழந்தைகள் மீதான போர்குற்ற நடவடிக்கைகளை தடுக்க முடியவில்லை. போர் குற்றங்களினால் இடம் பெயர்ந்து தொழிலாளறாக்கபடுவதும், குழந்தைகள் விற்கப்படுவதும், பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதும் தொடர்நிகழ்வாக உலகம் முழுவதிலும் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கிறது என்பது பெரும் வேதனைக்குரிய செயல்.

