இந்தியாவின் முன்னணி தொழிலாதிபராக இருப்பவர் முகேஷ் அம்பானி. நாட்டின் முக்கியமான தொழிற்சாலைகள் முதல், ஆடை வடிவமைப்பு, சில்லறை வர்த்தம் என இவர் கால்பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். அனைத்து துறைகளிலும் கால்பதித்துவரும் முகேஷ் அம்பானி தற்போது மும்பையில் சொந்தமாக ஒரு பள்ளி கூடம் நடத்திவருகிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். திருபாய் அம்பானி பள்ளி 2003ம் ஆண்டு மும்பையில் தொழிலதிபர் அம்பானி கட்டிய பள்ளி. அம்பானி தனது தந்தையின் திருபாய் அம்பானி என்ற பெயரை தன் பள்ளிக்கும் வைத்தார். இன்று இந்தியாவின் நம்பர் ஒன் சர்வதேச பள்ளியாகவும், உலகின் உள்ள முக்கிய விஐபி களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் ஒன்றாக அந்தபள்ளி விளங்குகிறதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்த பள்ளியில் பிரபல இயக்குனர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ஆகியோரின் பிள்ளைகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சுமார் 1090 மாணவர்களும் 170 ஆசிரியர்கள் உள்ளனர். அம்பானி பள்ளியில் குறைந்தப்பட்ச கட்டணம் ஆண்டிற்கு 1 லட்சத்து எழுபதாயிரமாகும்.
இப்பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் நாட்டின் முக்கியமானபாலிவுட் நடிகர்களான ஷாரூகான், அமிதாபச்சன், ஐஸ்வர்யா ராய், கரினா கபூர் என முன்னணி ஹீரோ,ஹீரோயின்கள், இயக்குநர்கள், அரசியல் பிரபலங்கள் என பலர் கலந்துக்கொள்வார்கள். நீங்கள் நினைப்பது அவர்கள் பள்ளி ஆண்டு விழாவில் விருந்தினர்களாக கலந்துகொள்ள வரவில்லை. அம்பானி பள்ளியில் படிக்கும் தங்களுடைய பிள்ளைகளில் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க தான் வந்தார்கள் என்பதே உண்மை.
திருபாய் அம்பானி பள்ளியில் ஐஸ்வர்யா பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா பச்சன், பாலிவுட் நடிகர் அமிர்கான் மகன் ஆசாத் ராவ் கான், ஷாருக்கான் மகன் அப்ராம் கான், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சஞ்சய் கபூர் மகன் ஜஹான் கபூர், ரித்திக் ரோஷன் மகன்கள் ஹ்ரிதான் ரோஷன், ஹ்ரேஹான் ரோஷன் ஆகியோரும் படித்து வருகின்றனர்.
மேலும் கரீஷ்மா கபூர் மகன் கியான் ராஜ் கபூர், பிரபல பாடகர் சோனு நிகம் மகன் நீவான் நீகம் ஆகியோரும் அம்பானி பள்ளியில் பயின்று வருகின்றனர். அதேபோல், மறைந்த நடிகை ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர், சைஃப் அலிகான் மகள் சாரா அலிகான் மற்றும் மகன் இப்ராஹிம் அலிகான், ஷாருக்கான் மகள் சுஹானா கான் மற்றும் மகன் ஆர்யன் கான், கிரிக்கெட்டர் சச்சின் மகள் சாரா தெண்டுல்கர் மற்றும் மகன் அர்ஜுன் தெண்டுல்கர், கஜோல் மற்றும் அஜய் தேவ்கான் மகள் நியசா தேவ்கான்,அமிர் கான் மகள் இரா கான் ஆகியோர் திருபாய் அம்பானி பள்ளியில் படித்து முடித்தவர்கள்.

இன்று அப்பள்ளி இந்தியாவில் சிறந்த பள்ளியாகவும் அனைவராலும் கவரக்கூடியதாகவும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கவனத்தை பெற்றவர்கள் பெரும் பணக்காரர்களும், புகழ்பெற்ற நடிகர் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளை மட்டுமே படிக்க வைக்கும் சூழல் உள்ளதே தவிர, சாமானிய மக்களுக்கான பள்ளியாக இல்லை என்பதே உண்மை.

