தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் தஞ்சை பெரிய கோயில் அமைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் துறையால் இந்த கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோயிலுக்கு 1987ஆம் ஆண்டில் யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இந்த தஞ்சை பெரிய கோயில் தமிழரின் கலைத்திறமையையும், பாரம்பரியத்தையும் உலகிற்திற்கு எடுத்து செல்லும் அளவுக்கு உள்ளது.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சாவூரை ஆண்ட மன்னன் ராஜராஜசோழன் இந்த கோவிலை கட்டியிள்ளார்.
எல்லாருக்கும் இந்த கோவிலின் பெயர் தஞ்சை பிரகதீஸ்வர் கோவில் என்று தான் தெரியும். ஆனால், சோழ மன்னன் இந்த கோவிலுக்கு வைத்த பெயர் தஞ்சை பெருவுடையார் கோவில். காலப்போக்கில இது தஞ்சை பெரிய கோவில் என்று மாறியுள்ளது. இந்த கோயில் தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் பல கோயில் சிற்பங்கள் இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலின்
தொழில் நுட்பம் மிக நுட்பமானது என்றே சொல்லாம்,இந்த கோயில் தமிழரின் பாரம்பரியச் சின்னமாக சொல்லலாம்.
காஞ்சிபுரம் என்னும் காஞ்சியை ஆண்ட ராஜசிம்ம பல்லவன், கைலாசநாதர் என்னும் கோவிலைக் காட்டியுள்ளார். அந்த கோவில்ல இருக்கிற அற்புதமான சிற்பக்கலைகளை பார்த்துதான் ராஜராஜசோழன் தானும் இப்படி ஒரு கோவில் உருவாக்குனும்னு முடிவெடுது கட்ட ஆரம்பித்துள்ளார்.
தஞ்சை பெரிய கோபுரத்தின உயரம் 216 அடிகளை கொண்டது.
இந்த கோயில் எவ்வளவு பெரிய இயற்கை சீற்றம் வந்தாலும் எந்த சேதம் ஏற்படாத அளவுக்கு தொழில் நுட்பமா கட்டியிள்ளனர்.
இந்த கோயில் கட்டுவதற்கு சுமார் 1 இலட்சம்பேரு ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.இந்த கோயிலை கட்டமைக்க
7 வருஷம் ஆனது.

தஞ்சை கோயிலின் வியக்கதக்க விஷயம் என்னென்னவென்றால்
இந்த கோபுரத்தின் மேலே இருக்கும் 80 டன் எடைகொண்ட ஒரே கல்லுனு சொல்லிட்டு வந்தனர்.
80 டன் கல்ல எப்படி ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே எப்படி கோபுரத்தின் உச்சயில வச்சியிருப்பார்கள் என்ற மர்மமும் கேள்வியும் ஆச்சர்யமும் மக்களிடையே இருந்துவந்து.
சமீபத்தில தொல்லியல் வல்லுனர்கள் தஞ்சைபெரிய கோயில் ஆராய்ச்சி செய்தனர்.
இதுகுறித்து தொல்லியல் உதவி இயக்குநர் ( பணி ஓய்வு) முனைவர் தீ.சுப்பிரமணி கூறுகையில்
பழமைவாய்ந்த தஞ்சை பெரிய கோயிலின் கோபுரம் 80 டன் அளவிளான ஒரே ஒரு கல் என்று சொல்லப்பட்டது சமீபத்தில் இக்கோயில் கும்பபிஷேகம் நடைபெற்றது.அப்போது ஆராய்ந்த தொல்லியல் வள்ளுநனர்கள் இந்த கோபுரத்தின் உச்சியில் உள்ள ஆரஞ்சி வடிவிலான கல், ஒரே கல் அல்ல, அது ஆறுகல்லால் இணைக்கப்பட்டு ஒரே கல் போன்று வடிவமைக்கப்பட்டது.மிகவும் நுட்பமாக செய்துள்ளனர்.என தெரிவித்தார்.
