நடுகல் என்பது தமிழரின் தொன்மையை குறிப்பிடுகிறது.தமிழர்கள் போரில் வீரமரணம் அடையும்போது அவர்களின் நினைவாக கல்லில் அந்த வீரரின் உருவம் பொறிக்கப்படும்.இதை நடுகல் என குறிப்பிடுகின்றனர்.இந்த நடுகல்லை நினைவு சின்னமா எழுப்பி வணங்குகின்றனர்.
வீரர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக இறந்தவர் நினைவாகவும் நடுகல் நடும் வழக்கம் உலகம் முழுவதும் நிலவுதொன்மையான வழக்கம் ஆகும்.
இதை தமிழரின் தொடக்க கால சிற்ப்பகலை என்று சொல்லலாம்.இதற்கு உதாரனமாக சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு சிலை வடித்தது இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் பிரிக்கப்படாத தருமபுரி மாவட்டத்தில்தான் அதிக அளவு நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது.
நடுகற்களுக்கென்றே அகழ்வைப்பகம் தருமபுரியில் உள்ளது.
கி.பி.5 நூற்றாண்டு தொடங்கி 18ஆம் நூற்றாண்டு வரை நடுகற்கள் உள்ளன. நடுகல் வழிபாடும் இம்மாவட்டத்தில் பெருமளவில் உள்ளது. கல்வெட்டுள்ள நடுகற்களைக் காட்டிலும் எழுத்தில்லா நடுகற்கள் இம்மாவட்டத்தில் அதிகமாக உள்ளது.
காடும் மலையும் மிகுந்துள்ள இம்மாவட்டத்தில் மாடுபிடி சண்டைக்காகவும், மனிதர்கள் விலங்குகளைக் கொல்லவும் நடந்த பூசல்களில் பலரும் இறந்துபட்டுள்ளதை இங்குள்ள நடுகற்கள் குறிப்பிடு கின்றன.
மழவர், அருவாளர், பங்களர், வடுகர், வணிகர் சான்றோர் எனப்பல இனத்தவருடைய நடுகற்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.
இங்குள்ள நடுகற்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1.தொறுப்பூசல்
2. சதிக்கல்
3. ஊர்க்காத்தாள் கல்
4. பெண்மீட்டான் கல்
5. புலிக்குத்திப்பட்டான் கல்
6. பன்றிக்குத்திப்பட்டான் கல் 7. குதிரைக்குத்திப்பட்டாள் கல்
8.நவகண்டம்
9. யானை குத்திப்பட்டான் கல்
10.சன்னியாசிக் கல்
11. கலைஞர்களுக்கு எடுத்த நடுகற்கல் என பலவகையான நடுகற்கல் உள்ளன.

