தென்னிந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்தின் தலைநகரம்
பெங்களூருவில்
லால்பாக் தாவரவியல் பூங்கா 1760 ஆம் ஆண்டு ஹைதர் அலியால் நிறுவப்பட்டது.
ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் லால்பாக் தோட்டக்கலையை உருவாக்கினார்.ஆங்கிலேயர் ஆட்சியின் போது, லால்பாக் பல தாவர வகைகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டு 1856 ஆம் ஆண்டு அரசாங்க தாவரவியல் பூங்காவாக மாறியது.
உலகப் புகழ்பெற்ற தோட்டம் இப்போது கர்நாடக அரசின் தோட்டக்கலை இயக்குநரகத்தால் பராமரிக்கப்படுகிறது.
லால்பாக் தாவரவியல் பூங்கா 240 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து 1850 க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டுள்ளது.
ஈரான், துருக்கி, மொரிஷியஸ், ஆப்பிரிக்கா மற்றும் காபூல் போன்ற தொலைதூர இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த லால்பாக்கில் வளர்க்கப்பட்டு வருகிறது.
லால்பாக்கில் உள்ள ஏரி, – இயற்கை ஆர்வலர்களுக்கான சொர்க்கம் என்று சொல்லாம்
பெங்களூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள லால்பாக் ஏரி அற்புதமான இயற்கை சூழ்ந்த நீர் நிலைபகுதியாகும்
சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி அதிகபட்சமாக 3.5 மீட்டர் ஆழம் கொண்டது. இந்த ஏரி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாக உள்ளது.
லால்பாக் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், லால்பாக் தாவரவியல் பூங்காவின் ஏராளமான தாவரங்கள் மற்றும் மரங்களுக்கு இந்த ஏரி நீர் ஆதாரமாகவும் உள்ளது .
லால்பாக் ஏரியின் அழகைக் கூட்ட இரண்டு அழகிய தீவுகள் உள்ளன. சுற்றியுள்ள பசுமையை பிரதிபலிக்கும் ஏரியின் நீர் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சி. உள்ளது. மரங்கள் நிறைந்த ஏரி அதன் ஓரங்களில் நன்கு பராமரிக்கப்பட்ட பாதையைக் கொண்டுள்ளது. இந்த பாதையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.
லால்பாக் ஏரி பல்வேறு வகையான பறவைகள் மற்றும் பல்வேறு நீர்வாழ் உயிரினங்களுக்கு உறைவிடமாக உள்ளது. ஏரியின் இரண்டு தீவுகள் நீர்ப் பறவைகளுக்கு முதன்மையான இடம் மற்றும் கூடு இடமாகும். சில பறவைகள் ஏரியை தங்களுடைய நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக்கொண்டுள்ளது.
உருளை வடிவில் புறா வீடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடு 19 ஆம் நூற்றாண்டில் புறாக்களுக்கான இல்லமாக கட்டப்பட்டது.100 ஜோடிக்கு மேற்பட்ட புறாக்கள் உள்ளன.
பெங்களூரு நகரத்தை வளமைபடுத்தவும் அழகிய நகரத்தை உருவாக்கவும் 1597 அப்போது ஆட்சிபுரிந்த
கெம்பேகவுடாவால் நான்கு புகழ்பெற்ற கண்காணிப்பு கோபுரங்கள் கட்டப்பட்டது.
இதில் ஒன்றுதான் லால் பாக்கில் உள்ள இந்த கோபுரம் இது பிராந்திய அடையாளமாக உள்ளது. கலைநயத்துடன் கட்டப்பட்ட கோபுரம், ஒரு பெரிய பாறையில் நிற்கிறது. இது தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.இந்த லால் பாக் பூங்கா வரலாற்றுல் முக்கிய இடம்பிடித்துள்ளது.

